டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பிரபல மலையாள சின்ன திரை நடிகர் ஓட்டல் அறையில் சடலமாக மீட்பு!

மலையாள நடிகர் திலீப் சங்கர் மரணத்தைப் பற்றி..

News image
நடிகர் திலீப் சங்கர்- தினமணி
Updated On :29 டிசம்பர் 2024, 12:53 pm

DIN

பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் தனது ஓட்டல் அறையிலிருந்து இன்று (டிச.29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மலையாள சின்ன திரையின் முன்னனி நடிகர் திலீப் சங்கர் இவர் பல்வேறு பிரபலமான சின்ன திரை தொடர்களில் நடித்து வந்தார். மேலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சின்ன திரை படப்பிடிப்பிற்காக இவர் திருவனந்தபுரத்திலுள்ள தனியார் விடுதியில் கடந்த 4 நாள்களாக தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது

இந்நிலையில், கடந்த இரு நாள்களாக அவருடன் நடிக்கும் நடிகர்கள் சிலர் அவரை செல்போனில் தொடர்புக் கொள்ள முயன்றுள்ளனர். ஆனால், அவர் எந்தவொரு அழைப்புக்கும் பதிலளிக்காததினால் சந்தேகம் ஏற்பட, அவர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு நேரில் சென்று பார்த்துள்ளனர்.

அங்கு, அவருடைய அறையிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று (டிச.29) காலை விடுதி ஊழியர்கள் அவரது அறையை திறந்து பார்த்ததில் திலீப் சங்கர் சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற் கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த அறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதில் திலீப் சங்கரின் மரணத்தில் சந்தேகம் படும்படியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவரது மரணத்திற்கான காரணம் உடற்கூராய்விற்கு பின்னரே தெரியவரும் எனவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.