சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா புதன்கிழமை தாக்கல் செய்தார்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
DOTCOM

சென்னை: சென்னை மாநகராட்சியின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா புதன்கிழமை தாக்கல் செய்தார்.

இதில், கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக இரண்டு சீருடைகள், 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலணிகள், வண்ண அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 5 பச்சை வண்ணப் பலகைகள், 225 பள்ளிக்கு தலா 4 சிசிடிவி கேமிராக்கள், 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்கள் சுற்றுலா உள்ளிட்டவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com