சென்னை: சென்னை மாநகராட்சியின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா புதன்கிழமை தாக்கல் செய்தார்.
இதில், கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக இரண்டு சீருடைகள், 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலணிகள், வண்ண அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 5 பச்சை வண்ணப் பலகைகள், 225 பள்ளிக்கு தலா 4 சிசிடிவி கேமிராக்கள், 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்கள் சுற்றுலா உள்ளிட்டவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.