திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கீழ்பென்னாத்தூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணம் செய்து 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்துக்குள்ளான ஆந்திரம் மாநில பதிவெண் கொண்ட காரில் வந்தவர்கள் குறித்த விவரங்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.