சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கடந்த ஜூலை 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 11-ஆம் தேதி தேர் திருவிழாவும், ஜூலை 12-ஆம் தேதி அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவமும் நடைபெறுகிறது. மேற்கண்ட இரண்டு நாள்கள் உற்சவத்திற்கு மூலவரான நடராஜப் பெருமானும், சிவகாமசுந்தரி அம்பாளும் சித்சபையிலிருந்து வெளியே வருவதால் பூஜை முன்னேற்பாடுகளை கருதி கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய ஜூலை 10,11,12,13 ஆகிய தேதிகளில் அனுமதியில்லை என பொதுதீட்சிதர்களால் நடத்தப்பட்டு வரும் கோயில் நிர்வாகம் தெரிவித்தது.