சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

சாம்பியன்ஸ் டிராபியில் வார்னர் இடம்பெறமாட்டார்: ஆஸி. தேர்வுக்குழு தலைவர்

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இடம்பெறமாட்டார் என ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

News image

டேவிட் வார்னர் (கோப்புப் படம்) - படம் | ஐசிசி

Updated On :15 ஜூலை 2024, 6:09 pm IST

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இடம்பெறமாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் டி20 உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெற்றார். சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வு பெற்ற போதிலும், சாம்பியன்ஸ் டிராபியில் அணியில் இடம்பெற்றால் விளையாடுவதற்குத் தயாராக இருப்பதாக அண்மையில் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இடம்பெறமாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது எங்களுடைய புரிதல். ஆஸ்திரேலிய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் கண்டிப்பாக இடம்பெற மாட்டார் என்றார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.