காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

தோல்வியிலிருந்து தொடர்ச்சியாக 4 வெற்றிகள் எப்படி சாத்தியமானது? ஷுப்மன் கில் பதில்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு இந்தியாவுக்கு தொடர்ச்சியாக 4 வெற்றிகள் எப்படி சாத்தியமானது.

குடும்பத்தினருடன் ஷுப்மன் கில் - படம் | ஷுப்மன் கில் (எக்ஸ்)

Published On :15 ஜூலை 2024, 6:04 pm IST

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு இந்தியாவுக்கு தொடர்ச்சியாக 4 வெற்றிகள் எப்படி சாத்தியமானது என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 14) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அசத்தியது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தோல்வியுடன் தொடங்கிய இந்திய அணி, தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு இந்தியாவுக்கு தொடர்ச்சியாக 4 வெற்றிகள் எப்படி சாத்தியமானது என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, வெற்றி பெற வேண்டும் என்ற எங்களது வேட்கை தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளதாக நினைக்கிறேன். டி20 தொடருக்காக இங்கு வந்த பிறகு, அதிக அளவு வலைப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு நேரமில்லை. அதனால் முதல் போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை எங்களால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதன்பின், ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக் கொண்டு தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.