ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

தோல்வியிலிருந்து தொடர்ச்சியாக 4 வெற்றிகள் எப்படி சாத்தியமானது? ஷுப்மன் கில் பதில்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு இந்தியாவுக்கு தொடர்ச்சியாக 4 வெற்றிகள் எப்படி சாத்தியமானது.

News image

குடும்பத்தினருடன் ஷுப்மன் கில் - படம் | ஷுப்மன் கில் (எக்ஸ்)

Updated On :15 ஜூலை 2024, 6:04 pm IST

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு இந்தியாவுக்கு தொடர்ச்சியாக 4 வெற்றிகள் எப்படி சாத்தியமானது என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 14) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அசத்தியது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தோல்வியுடன் தொடங்கிய இந்திய அணி, தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு இந்தியாவுக்கு தொடர்ச்சியாக 4 வெற்றிகள் எப்படி சாத்தியமானது என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, வெற்றி பெற வேண்டும் என்ற எங்களது வேட்கை தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளதாக நினைக்கிறேன். டி20 தொடருக்காக இங்கு வந்த பிறகு, அதிக அளவு வலைப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு நேரமில்லை. அதனால் முதல் போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை எங்களால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதன்பின், ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக் கொண்டு தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.