கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மூன்றரை மணி நேரத்திற்கு பிறகு பணிக்கு திரும்பிய தூய்மைப் பணியாளர்கள்!

பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், மூன்றரை மணி நேரத்திற்கு பிறகு பணிக்கு திரும்பினர்.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜூலை 2024, 8:18 am

நீடாமங்கலம்: பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், மூன்றரை மணி நேரத்திற்கு பிறகு பணிக்கு திரும்பினர்.

நீடாமங்கலம் பேரூராட்சியில் வரிவசூல் பணி முடிந்த பின்பு சம்மந்தப்பட்ட தூய்மைப் பணியாளர், தூய்மைப் பணிக்கு வரவேண்டும் எனக்கோரி மற்ற தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் புதன்கிழமை அதிகாலை பேரூராட்சி அலுவலகம் வந்த போதும் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் சமாதனம் செய்ய முயன்றபோதும் தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து தங்கள் தெருவுக்குச் சென்று வீடுகளின் முன்பு அமர்ந்து கொண்டனர். இதனால் நீடாமங்கலம் பேரூராட்சியில் சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது

இந்த நிலையில், பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுடன் பேரூராட்சி தலைவர் ஆர்.ஆர்.ராம்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதன் பிறகு தூய்மைப் பணியாளர்கள் மூன்றரை மணி நேரம் கழித்து காலை 10.30 மணிக்குப்பிறகு பணிக்கு திரும்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.