/

ஊரகப் பகுதி சார்ந்த திட்டங்களுக்கு ரூ. 2.66 லட்சம் கோடி: நிதியமைச்சர்

நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்துக்கு ரூ. 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

News image
Updated On :23 ஜூலை 2024, 6:20 am

DIN

ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ. 2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

அவரது உரையில், ”நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும். முத்ரா கடன் ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்துக்கு ரூ. 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 12 தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.