
தோல் மற்றும் ஆயுத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.
அவரது உரையில், “தோல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும். பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது. அறக்கட்டளைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதம் 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் முதல் முறையாக பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு நேரடி பணபரிமாற்ற திட்டத்தின் கீழ் 15,000 ரூபாய் வரையிலான ஒரு மாத சம்பளத் தொகை 3 தவணைகளாக வழங்கப்படும்.
மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கு அடிப்படை இறக்குமதி வரிவிகிதம் குறைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.