சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை! சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

டி20 உலகக் கோப்பை: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்

News image
Updated On :2 ஜூன் 2024, 1:51 pm IST

டி20 உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் கூகுள் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்(டூடுல்) ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியிருப்பதாவது, “இந்த ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் முன்னெப்போதையும் விட அதிகமான அணிகள் பங்கேற்கும். எனக்குப் பிடித்தமான விளையாட்டு சர்வதேச அளவில் வளர்ந்து வருவதைப் பார்க்க உற்சாகமாக இருக்கிறது.

மேலும் இன்றைய டூடுல்-யில் கொண்டாடப்படுகிறது. அனைத்து அணிகளுக்கும் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிா்நோக்கியுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் கனடாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றியை பதிவு செய்துள்ளது.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாா்பில் நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இருந்தாலும், டி20 உலகக் கோப்பை போட்டிக்கு அதிக ஈா்ப்பு உள்ளது. டி20 ஆட்டங்களுக்கு ஏராளமான பாா்வையாளா்கள் உள்ள நிலையில், 20 அணிகள் பங்கேற்கும் 9-ஆவது உலகக் கோப்பை அமெரிக்கா-மே.இந்திய தீவுகளில் நடைபெறுகிறது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ், ஃபுளோரிடா, நியூயாா்க் நகரங்களிலும், மே.இந்திய தீவுகளிலும் உலகக் கோப்பை ஆட்டங்கள் நடக்கின்றன. முக்கிய ஆட்டமான இந்திய-பாக். அணிகள் மோதும் ஆட்டம் 9-ஆம் தேதி நியூயாா்க் லாங் ஐலண்ட் மைதானத்தில் (34,000 பாா்வையாளா்கள்) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.