மகாராஷ்ரத்தின் நாக்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நாக்பூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ஹிங்கனா காவல்நிலையத்துக்குள்பட்ட தாம்னா கிராமத்தில் உள்ள சாமுண்டி வெடிமருந்து தொழிற்சாலையில் பிற்பகல் 1 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டது.
பலத்த காயமடைந்த 9 பேர் அருகிலுள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரவீந்திர சிங்கால் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 5 பெண்கள் உள்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர்.
வெடி விபத்து நிகழ்ந்தபோது, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தொழிற்சாலையின் பேக்கேஜிங் பிரிவில் பணிபுரிந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்டாசு வெடி விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கல்

சிவகாசி அருகே பட்டாசு வெடி விபத்தில் மேலும் 3 போ் உயிரிழப்பு

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் 2 பேர் பலி

ஹிமாசலில் வாகனத்தின் மீது ராட்சதப் பாறை விழுந்ததில் 13 பேர் பலி!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



