கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாக்பூர்: வெடி மருந்து தொழிற்சாலை தீ விபத்தில் 6 பேர் பலி!

நாக்பூர் அருகே வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.

News image

படம் | ஏஎன்ஐ

Updated On :13 ஜூன் 2024, 12:02 pm

மகாராஷ்ரத்தின் நாக்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நாக்பூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ஹிங்கனா காவல்நிலையத்துக்குள்பட்ட தாம்னா கிராமத்தில் உள்ள சாமுண்டி வெடிமருந்து தொழிற்சாலையில் பிற்பகல் 1 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டது.

பலத்த காயமடைந்த 9 பேர் அருகிலுள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரவீந்திர சிங்கால் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 5 பெண்கள் உள்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர்.

வெடி விபத்து நிகழ்ந்தபோது, ​​பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தொழிற்சாலையின் பேக்கேஜிங் பிரிவில் பணிபுரிந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.