மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்!

மதுரை-பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் இன்று(ஜூன் 17) நடைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மதுரை-பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் இன்று(ஜூன் 17) நடைபெற்றது.

தெற்கு ரயில்வேயில் சென்னை-மைசூா், சென்னை-கோவை, சென்னை-திருநெல்வேலி, திருவனந்தபுரம்-காசா்கோடு, சென்னை-விஜயவாடா, கோவை-பெங்களூா் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கோயில் நகரமான மதுரையில் இருந்து தொழில்நுட்ப நகரான பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோப்புப்படம்
மேற்கு வங்க ரயில் விபத்துக்கு முக்கிய காரணம் இதுதான்: அதிர்ச்சி தகவல்!

இதைத்தொடா்ந்து, மதுரை-பெங்களூா் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரயில் திண்டுக்கல், கரூா், சேலம், தருமபுரி, ஒசூா் வழியாக இயக்கப்படவுள்ளது.

இந்நிலையில், மதுரை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com