பில்லூர் அணை திறப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது.
பில்லூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர்.
பில்லூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர்.
Published on
Updated on
2 min read

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து 14,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியொட்டி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி. அணைக்கு நீலகிரி, கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழைநீர் முக்கிய நீராதாரமாக உள்ளது.

இந்தநிலையில், கடந்த ஆண்டு கேரளம் நீலகிரி பதிகளில் பெய்த கன மழையின் காரணமாக பில்லூர் அணை அதன் முழு கொள்ளளவான 100 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையிலிருந்து தண்ணீர் நான்கு மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. இதனிடையே கடந்த ஓராண்டாக மேற்கண்ட பகுதிகளில் போதிய மழை பொழியாததால் அணைக்கான நீர் வரத்து முற்றிலும் குறைந்தது.இதனால் பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு வந்த 17 குடிநீர் திட்டங்களும் முடக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனிடையே இந்த ஆண்டு பருவமழைகள் பெய்தும் அணைக்கான நீர் வரத்து குறைந்ததால் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படாமல் இருந்தது.

பில்லூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர்.
மிஸ் பண்ணிடாதீங்க... பட்டதாரிகளுக்கு எஸ்பிஐ வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு!
பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.
பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

இந்தநிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கான நீர்வரத்து புதன்கிழமை நள்ளிரவு அதிகரித்தது. இதனால் அதிகாலை 4 மணிக்கு பில்லூர் அணையில் இருந்து ஓராண்டுக்குப் பின் 14,000 கன அடி நீர் அணையின் 4 மதகுகள் வழியாக இருந்து திறக்கப்பட்டது. அதன்பின் 5 மணிக்கு நீர்வரத்து சற்று குறைந்ததால் 9,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. ‌ தொடர்ந்து 5.30 மணிக்கு மீண்டும் 12 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 14,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில், பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பவானியாற்றின் கரையோரப் பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம், சிறுமுகை,வெண்ணல்நாயுடு வீதி, ஒடந்துறை இந்திரா நகர், குஞ்சவண்ணான் தெரு, சீரங்க ராயன் ஓடை,வெள்ளிப்பாளையம், உள்ளிட்ட ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் அதிகாரிகள்.
மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் அதிகாரிகள்.

மேலும் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது, மீன் பிடிக்கவோ மக்கள் யாரும் செல்லக் கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேட்டுப்பாளையம் உதகை சாலையில் உள்ள பவானி ஆற்றுப்பாலத்தில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன், மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் நகரிப்பா பர்வீன், ஆணையாளர் அமுதா, காவல் உதவி ஆய்வாளர் தணிகாசலம் ஆகியோர் கரையோர பகுதிகள் வசிக்கும் மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பவானியாற்றில் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com