மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்றுக்கு 5 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.

News image

கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதமடைந்த வாழைகளை நேரில் ஆய்வு செய்த மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் .

Updated On :5 மே 2024, 4:42 pm

மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்றுக்கு 5 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.

மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தண்டா, பெரிய தண்டா, நீதிபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கதலி, செவ்வாழை, பூவன் போன்ற வாழை பயிரிட்டிருந்தனர்.

இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலமான கர்நாடகத்திற்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது.

குலை தள்ளிய நிலையில் இருந்த வாழைத்தாா்கள் விற்பனைக்கு தயாராக இருந்தன.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் பலன் தரும் நிலையில் இருந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாழைகள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு

மேலும் மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.