பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்றுக்கு 5 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.

News image
கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதமடைந்த வாழைகளை நேரில் ஆய்வு செய்த மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் .
Updated On :5 மே 2024, 4:42 pm

DIN

மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்றுக்கு 5 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.

மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தண்டா, பெரிய தண்டா, நீதிபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கதலி, செவ்வாழை, பூவன் போன்ற வாழை பயிரிட்டிருந்தனர்.

இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலமான கர்நாடகத்திற்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது.

குலை தள்ளிய நிலையில் இருந்த வாழைத்தாா்கள் விற்பனைக்கு தயாராக இருந்தன.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் பலன் தரும் நிலையில் இருந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாழைகள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு

மேலும் மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.