சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மோடியின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மம்தா!

தேர்தல் ஆணையம் ஒரு பொம்மை போல செயல்படுகிறது என மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
மம்தா
Updated On :15 மே 2024, 12:25 pm

DIN

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் சின்சுராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரும், நடிகையுமான ரச்சனா பானர்ஜியை ஆதரித்துபேசிய மம்தா பானர்ஜி,"தேர்தல் ஆணையம் பாஜகவுக்காக இரண்டரை மாதங்களாக வாக்குப்பதிவை நடத்துகிறது. இதனால்,சாதாரண மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா?".

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம், அவரின் கைப்பாவையாக செயல்படுகிறது.

பிரதமர் மோடி, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை விரிவுபடுத்த அறிவித்ததன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார்.

தேர்தல் நடக்கும்போது ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்? இதை முன்பே அறிவித்திருக்க வேண்டும்.

பாஜக மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை எட்டுமா என்பது சந்தேகம் தான். 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறுகிறது, ஆனால் இந்த முறை அது நடக்காது என்று மக்கள் கூறுகின்றனர்.

மத்தியில் ஆட்சி அமைக்க இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்போம்.

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), பொது சிவில் சட்டம் (யுசிசி) ஆகியவற்றை அமல்படுத்த முடியாது" எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.