கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வாக்குச் செலுத்தாவிட்டால் தண்டனை: நடிகர் பரிந்துரை!

வாக்குச் செலுத்தாதவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமென்று நடிகர் பரேஷ் ராவல் கூறியுள்ளார்.

News image
பரேஷ் ராவல்
Updated On :20 மே 2024, 10:00 am

DIN

மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு பல மாநிலங்களில் இன்று நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து, மும்பையில் தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜகவின் முன்னாள் மக்களவை உறுப்பினரும், நடிகருமான பரேஷ் ராவல் மக்கள் தேர்தலில் பங்குபெறுவதன் அவசியத்தைக் குறித்துப் பேசியவர், “அரசாங்கம் எதையும் செய்வதில்லை என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால் இன்று நீங்கள் வாக்கு செலுத்தவில்லையென்றால், அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. அரசாங்கம் அல்ல” என்றார்.

மேலும், ”வாக்களிக்க வராதவர்களுக்கு வரியை அதிகப்படுத்துவது அல்லது வேறு தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்” என்றும் கூறினார்.

பல்வேறு இந்தி படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பரேஷ் ராவல், தமிழில் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பரேஷ் ராவல் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.