முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

திமுகவை விமர்சித்தாலே சங்கியா? - சீமான்!

ரஜினிகாந்த் சந்திப்பு தொடர்பாக சீமான் பேச்சு...

News image

சீமான் - கோப்புப்படம்

Updated On :22 நவம்பர் 2024, 2:52 pm IST

திமுகவை விமர்சித்தாலே சங்கியா என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை போயஸ் காா்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்துக்கு வியாழக்கிழமை நேரில் சென்ற சீமான் அவரிடம் வாழ்த்துப் பெற்றார். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், திரைத்துறை குறித்தும் இருவரும் பேசியதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு சீமான் அளித்த பேட்டி:

”விமர்சனங்களை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. அவதூறுகளை கடக்க விரும்பாதவன் வெற்றியை கடந்து செல்ல முடியாது. சங்கி என்றால் சகதோழன் அல்லது நண்பன் என்று அர்த்தம்.

திடீரென்று பிரதமரை காலையில் மகனும்(உதயநிதி) மாலையில் தந்தையும்(ஸ்டாலின்) சந்திக்கிறார்கள். எதற்கு சந்திப்பு என்று சொல்லப்படுவதில்லை, எதைப்பற்றி பேசினார்கள் என்றும் கூறவதில்லை.

ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து நான் வெளிப்படையாக கூறுகிறேன். முதல்வருக்கும் பிரதமருக்கும் கள்ளஉறவு இல்லை, நல்லஉறவுவே இருக்கிறது. எங்களை சங்கினு சொல்கிறார்கள்.

திமுகவை எதிர்த்தாலே சங்கியா?” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.