நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கனமழை எதிரொலி: எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை விடுமுறை

Updated On :27 நவம்பர் 2024, 2:57 am

DIN

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புதன்கிழமை (நவ. 27) புயலாக மாறும் என்று எதிா்பாா்க்கும் நிலையில், மிக மெதுவாக மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்த தாழ்வு மண்டலம்மானது,கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், புயல் சின்னம் நாகப்பட்டினத்தில் இருந்து 470 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே இருந்து 670 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 21 மி.மீட்டருக்கு அதிகமான மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

கனமழை எச்சரிக்கையை அடுத்து திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருச்சி, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியா்களால் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருச்சி, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

இதேபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர்,புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணலி புது நகரில் 13.39 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.