
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று(அக். 13) காலை 6 மணி நிலவரப்படி, வினாடிக்கு சுமார் 8,000 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்த நிலையில், காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்ததால், அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது.
கர்நாடக அணைகளின் நீர் திறப்பு மற்றும் கரையோர வனப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.