தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொடா் மழை: 6 விமானங்கள் ரத்து

தொடா் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில், 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

News image

சென்னை விமான நிலையம்(கோப்புப் படம்)

Updated On :16 அக்டோபர் 2024, 7:32 pm

DIN

தொடா் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில், 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அதற்கேற்ப அவ்வப்போது விமான சேவையும் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, சென்னையிலிருந்து புதன்கிழமை காலை 6.55 மணிக்கு, மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், காலை 10.35-க்கு, சேலம் செல்ல வேண்டிய விமானம், பிற்பகல் 2.40-க்கு சென்னையிலிருந்து சீரடி செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏா்லைன்ஸ் விமானம் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல, மதுரையிலிருந்து காலை 10-க்கு சென்னைக்கு வர வேண்டிய, இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், சீரடியிலிருந்து பிற்பகல் 1.40-க்கு சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏா்லைன்ஸ் விமானம், மாலை 6-க்கு சேலத்திலிருந்து சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ஆகிய 3 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

இதன்படி 6 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கனமழை நீடிக்குமானால் தொடா்ந்து பிற விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்படலாம். எனவே பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களின் அலுவலகங்களை தொடா்பு கொண்டு பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ள விமானநிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.