அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

சின்னத்திரையில் நாயகனாக நடிக்கும் சினேகன்!

பாடலாசிரியர் சினேகனின் புதிய தொடர் அறிவிப்பு.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:39 pm IST

சின்னத்திரையில் பாடலாசிரியர் சினேகன் நடிக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரான சினேகன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

புத்தம்புது பூவே படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான சினேகன், ஆட்டோகிராஃப் படத்தில் இடம் பெற்றிருந்த ஞாபகம் வருதே மற்றும் ராம் படத்தில் இடம் பெற்றிருந்த ஆராரிராரோ பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

சினிமாவில் யோகி படத்தின் மூலம் நடிப்புப் பயணத்தை தொடங்கிய சினேகன், சின்னத்திரையில் சில தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரான பவித்ரா தொடரில் நாயகனாக நடிக்கிறார் சினேகன். இத்தொடரில் பிரதானப் பாத்திரத்தில் பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத் நடிக்கிறார்.

பவித்ரா தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. இதில், அனிதா சம்பத்தின் அம்மாவாக நடிகை கீதா நடிக்கிறார். கீதா வீட்டில் வேலை செய்பவராக சினேகன் நடிக்கிறார்.

இத்தொடர் நவம்பர் 4 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பவித்ரா தொடரின் முன்கதை படமாக நவ. 4 ஆம் தேதி இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.