/

சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக புதுச்சேரி பாஜக எம்.பி. அவகாசம்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி 3 மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

News image

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி

Updated On :25 அக்டோபர் 2024, 1:09 pm IST

புதுச்சேரி: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி 3 மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுச்சேரி பாஜக தலைவரும் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.செல்வகணபதி எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அதிகாரிகள் முன் வெள்ளிக்கிழமை(அக் 25) ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3 மாதம் அவகாசம் வேண்டும் என செல்வகணபதி கடிதம் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.