ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜா யானை!

நடைப் பயிற்சிக்கு செல்வது போன்று ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜாவை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்க
நடைப் பயிற்சிக்கு செல்வது போன்று ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜா
நடைப் பயிற்சிக்கு செல்வது போன்று ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜா
Published on
Updated on
1 min read

கோவை: கோவை செம்மேடு, ஆலங்குட்டை பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டுயானை சிறுவாணி காட்டு ராஜா சனிக்கிழமை நடைப் பயிற்சிக்கு செல்வது போன்று ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜாவை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்க பாதுகாப்புடன் பின் தொடர்ந்து செல்வது போன்ற செல்போன் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கோவை தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் முகாமிட்டு உணவு தேடி ஊருக்குள் வருவதும், வீடுகளை சேதப்படுத்தி அரிசி, பருப்பு போன்றவற்றை தின்று சேதப்படுத்தி செல்வதும், வளர்ப்பு விலங்குகளுக்கு வைத்து உள்ள தீவனங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி சூறையாடுவதும் அதனை வனப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டுவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில், ஆலாந்துறை அடுத்த செம்மேடு, ஆலங்குட்டை பகுதியில் சனிக்கிழமை நடைப் பயிற்சிக்கு செல்வது போன்று ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி பகுதி காட்டு ராஜா யானையை அந்த பகுதி விவசாயி மேற்கு நோக்கி செல்லுமாறு கூறுகிறார். அதனைத் தொடர்ந்து வனத்துறை வாகனம் அதனை வனப்பகுதிக்கு அனுப்பி வைக்க பாதுகாப்புடன் பின் தொடர்ந்து செல்வது போன்ற செல்போன் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com