சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மூதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அமெரிக்கா பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையளத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Published On :14 செப்டம்பர் 2024, 9:27 am IST

சென்னை: மூதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அமெரிக்கா பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை சென்னை திரும்பினார்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களுக்கு முதல்வா் பயணம் மேற்கொண்டாா். அங்கு பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

ரூ.7,618 கோடி முதலீடுகள் ஈா்ப்பு

அமெரிக்கப் பயணத்தின் போது, இதுவரை 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,618 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயா் அலுவலா்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை திரும்பினார் முதல்வர்

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பதற்கான 17 நாள் அரசுமுறை அமெரிக்கா பயணங்களை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னைை திரும்பினார்.

சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.