
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,629 கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் இன்று(செப். 15) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,217 கன அடியிலிருந்து வினாடிக்கு 14,629 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 111.75 அடியிலிருந்து 111. 19 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 80.11 டிஎம்சியாக உள்ளது.