சென்னை: பௌா்ணமி தினத்தையொட்டி, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விழுப்புரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06130) காலை 11 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். தொடா்ந்து, விழுப்புரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 9.15 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரயில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கம்

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்

கோடை விடுமுறை: சிறப்பு ரயில்கள் இயக்கம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



