டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

கோவை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை: ரூ.1.50 லட்சம் பறிமுதல்!

கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் வியாழக்கிழமை மாலை திடீர் சோதனையில் மேற்கொண்டதில், கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

News image

கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் திடீர் சோதனை

Updated On :20 செப்டம்பர் 2024, 11:56 am IST

கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் வியாழக்கிழமை மாலை திடீர் சோதனையில் மேற்கொண்டதில், கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

கோவை வெள்ளலூரில் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகம் அமைந்து உள்ளது. இந்த அலுவலகத்தில் சார் பதிவாளராக நான்சி நித்யா கரோலின் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், பத்திரப் பதிவிற்காக சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் தொழில் அமைப்பினரிடம் பத்திர எழுத்தர்கள் மூலம் லஞ்சம் வசூலித்து வருவதாக கோவை லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் கிடைத்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் பரிமளா தலைமையிலான போலீசார் வியாழக்கிழமை மாலை 5:30 மணி அளவில் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சார் பதிவாளர் அலுவலகத்தின் வாயில் கதவுகளை பூட்டிய போலீசார் அலுவலக வளாகத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சார் பதிவாளர் அலுவலக ஊழியர் கீர்த்தியிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.