பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், அம்மாகாணத்தின் தலைநகர் குவேட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இணையதள சேவையானது முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தானின் குஸ்தார், கலாத் மற்றும் மங்கோசர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 6 நாள்களாக இணைய சேவையானது முற்றிலும் முடக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (ஏப்.2) இரவு மீண்டும் துவங்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பியது. ஆனால், சேவை துவங்கப்பட்ட 3 மணி நேரங்களில் மீண்டும் முடக்கப்பட்டுள்ளதினால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தொடர்ந்து முடக்கப்படும் இணையதள வசதியினால் பலூசிஸ்தான் மக்களின் வியாபாரம், இணையவழிக் கல்வி உள்ளிட்ட முக்கிய தேவைகள் கடுமையான பாதிப்புக்குள்ளானதாகவும் இதனால் அதிகாரிகள் உடனடியாக இணைய சேவையை மீண்டும் நிரந்தரமாக வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அம்மாகாணம் முழுவதும் இணைய வசதி முடக்கப்படுவது குறித்து பாகிஸ்தான் அரசு தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில் அங்கு வலுவடைந்து வரும் மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பலூசிஸ்தான் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முன்னதாக, பலூசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த பலூச் ஆர்வலர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக மாயமாக்கப்படுகிறார்கள். மேலும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கிளர்ச்சிப்படைகள் தாக்குதல் நடத்தியும், பலூச் மக்கள் போராட்டம் நடத்தியும் வருகிறார்கள்.
மேலும், தொடர் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் பல முக்கிய பல்கலைக்கழகங்கள் தங்களது மாணவர்கள் நேரடியாக வரவேண்டாம் என அறிவுறுத்தி இணையவழிக் கல்வியை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொது கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மக்கள் திடீர் சாலை மறியல்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை கோலாகலம்!

‘5ஜி நெட்வொா்க் ஸ்லைசிங்’ சேவை: ஏா்டெல் நிறுவனத்துக்கு ஜியோ ஆதரவு

அரசுப் பள்ளி கட்டடப் பணிகள் முடக்கம்: பெற்றோா் அதிருப்தி
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



