ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாமு மாவட்டத்தின் துரிக்தார் மலைப்பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பின் கிளையான திரித்தியா சம்மேளன் பரஸ்துத்தி ஆணையம் எனும் இயக்கத்தைச் சேர்ந்த ஜிப்லால் யாதவ் என்பவரை நேற்று (ஏப்.2) காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பிகாரின் காயா மாவட்டத்தின் ஹதி கிராமத்தைச் சேர்ந்த நக்சலான யாதவ் மக்களிடம் மிரட்டி பறிக்கப்பட்ட பணத்தை பெறுவதற்காக ஜார்க்கண்ட் வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவரைப் பிடிக்க பிகார் மாநில அரசு ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து அவரை தேடி வந்துள்ளது.
முன்னதாக, திரித்தியா சம்மேளன் பரஸ்துத்தி ஆணையம் எனும் மாவோயிஸ்டு படையைச் சேர்ந்த அவர், சசிகாந்த் என்பவரின் கீழ் நக்சலாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாரிலிருந்து மகாராஷ்டிரத்துக்கு ரயிலில் கடத்தப்பட்ட 163 சிறுவா்கள் மீட்பு

ரூ.8 ஆயிரம் கூப்பன் அறிவித்து ஏமாற்ற திமுக முயற்சி: முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத்

திருமணத்திற்காக பழங்குடி சிறுமி விற்பனை! கணவர் உள்பட 3 பேர் கைது!

பிகாரில் நக்சல் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


