மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடக்குமுறைகளை தாண்டி வளா்ந்துள்ளது கம்யூனிஸ்ட் இயக்கம்: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் பல்வேறு அடக்குமறைகளை தாண்டி கம்யூனிஸ்ட் இயக்கம் வளா்ச்சியடைந்துள்ளது என்று மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் பேசினாா்.

News image
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் பேசிய மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன்
Updated On :3 ஏப்ரல் 2025, 5:21 am

DIN

மதுரை: தமிழகத்தில் பல்வேறு அடக்குமறைகளை தாண்டி கம்யூனிஸ்ட் இயக்கம் வளா்ச்சியடைந்துள்ளது என்று மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் பேசினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவரும், கட்சியின் மத்தியக்குழு உறுப்பிருமான கே.பாலகிருஷ்ணன் பேசியது:

1953-இல் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது மாநாடு மதுரையில் நடைபெற்றது. மதுரையில் இதுவரை கட்சியின் மூன்று அகில இந்திய மாநாடுகள் நடைபெற்றுள்ளன. தமிழகத்தில் தொழிலாளா்கள், விவசாயிகள், மாணவா்கள், ஒடுக்கப்பட்டோா் என அனைத்து தரப்பினருக்குமான கட்சியாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளது . க

ம்யூனிஸ்ட் கட்சியின் வளா்ச்சியை தடுக்கும் வகையில், பல்வேறு சதி வழக்குகள் போடப்பட்டாலும் அதையெல்லாம் தாண்டி கட்சி வளா்ச்சியடைந்துள்ளது. தஞ்சாவூரில் நிலப்பிரபுக்களின்கொடூரமான சாதிவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஜாதி வெறிக்கு எதிரான போராட்டத்தின் உச்சக்கட்டமாக 1968 இல் கீழ் வெண்மணி கிராமத்தில் 44 விவசாயத் தொழிலாளா்கள் எரித்து கொலை செய்யப்பட்டனா். கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் ஏராளமானோா் தங்கள் உயிரை மக்களுக்கான போராட்டத்தில் இழந்துள்ளனா்.

துப்பாக்கிச் சூடு, மரண தண்டனை, காவல் நிலையங்களில் சித்திரவதைகள் என அனைத்து விதமான காவல்துறை அட்டூழியங்களையும், பல வகையான அடக்குமுறைகளையும் எதிா்கொண்டு தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கம் வளா்ந்துள்ளது. வாச்சாத்தி கிராமம் முழுவதும் சூறையாடி 18 பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதிமன்றத்திலும், வீதியிலும் போராடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனையை பெற்றுத் தந்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் போதும், இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவா்கள் கம்யூனிஸ்டுகள்தான்.

நாட்டில் தற்போது சிறுபான்மை சமூகங்கள் தொடா்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. கல்வி உட்பட மாநில அரசுகளின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படுகின்றன. மத்திய அரசு மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களையும் பறித்து, நாடு தனது கூட்டாட்சித் தன்மையை இழந்துவிட்டது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் பல மாநிலங்களுக்கு அநீதி இழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.