பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஜார்க்கண்ட்: பள்ளிக்கூடத்தில் மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயம்!

ஜார்க்கண்டில் பள்ளிக்கூடத்தில் மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2025, 6:38 pm IST

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீது மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கோடெர்மா மாவட்டத்தின் லால்காபானி கிராமத்திலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் இன்று (ஏப்.9) மதியம் வகுப்பு நடந்துக்கொண்டிருந்த போது அந்தக் கட்டடத்தின் மீது மின்னல் பாய்ந்ததில் 9 மாணவர்கள் காயமடைந்ததுள்ளனர்.

இதுகுறித்து பள்ளி வளாகத்திலிருந்த சில பெற்றோர்கள் கூறுகையில், அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆஸ்பெடாஸ் தகரத்தின் மூலம் கூரை அமைத்ததுடன், மாணவர்கள் அமர்ந்திருக்கும் மேஜைகள் அனைத்தும் இரும்பினால் செய்யப்பட்டிருந்ததாகவும், இதனால் மின்னல் பாய்ந்தபோது வகுப்பறையினுள் மேஜையில் அமர்ந்திருந்த மாணவர்களின் மீது மின்சாரம் பாய்ந்து அவர்கள் காயமடைந்ததாகக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், படுகாயமடைந்த மாணவர்கள் அனைவரும் அங்குள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் அனைவரின் உடல்நிலையும் சீராகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட காரணமாய் இருந்த பள்ளியின் கட்டுமானம் குறித்தும் அங்கு பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.