பாகிஸ்தானில் தலிபான்களின் முக்கிய தலைவர் உள்பட 2 தீவிரவாதிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தீர் மாவட்டத்தில் தெஹ்ரீக்-எ-தலிபான் அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் உள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரைகளை விரட்டி சென்றுள்ளனர். அப்போது, அதில் பயணம் செய்த இருவரும் தீவிரவாதிகள் என உறுதியானதினால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில் அதில் ஒருவர் தலிபான் அமைப்பின் முக்கிய தலைவரும் தேடப்பட்டு வந்த தீவிரவாதியுமான கொச்வான் (எ) ஹஃபீஸுல்லா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொல்லப்பட்ட மற்றொருவரை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, அந்த பகுதி முழுவதும் முடக்கிய பாதுகாப்புப் படையினர் அங்கு வேறு தீவிரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா என்று தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கணிணி அறிவியல் பட்டதாரியான ஹஃபீஸுல்லா தீர் மாவட்டத்தின் கோஹான் கிராமத்தைச் சேர்ந்தவர். ஜெய்ஷ்-எ-முஹம்மது எனும் பயங்கரவாத அமைப்பில் பணியாற்றிய அவர் அதன் பின்னர் தலிபான் அமைப்பில் இணைந்து கொண்டார்.
இந்நிலையில், தலிபான் அமைப்பின் மூலம் மர்தான் மாகாணத்தின் நிழல் உலக ஆளுநராக பணியாற்றிய அவர் கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து ஏராளமான தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தியுள்ளார்.
மேலும், இவரைப் பிடிக்க பாகிஸ்தான் அரசு சுமார் 50 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அளவிலான பணத்தை (இந்திய பணமதிப்பில் ரூ.15.3 லட்சம்) வெகுமதியாக அறிவித்து தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:நேபாள மன்னராட்சி போராட்டத்தின் முக்கிய தலைவர் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தான் காவல் சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜாா்க்கண்டில் முக்கிய மாவோயிஸ்ட் அதிரடி கைது - ‘ரூ.2.2 கோடி வெகுமதி; 175 வழக்குகளில் தொடா்பு’

பாகிஸ்தான் கடலோரக் காவல்படை மீது பிஎல்ஏ தற்கொலைப் படை தாக்குதல்

‘உறவை மீட்டெடுக்க வேண்டும்’: இந்தியா, பாகிஸ்தான் பிரதமா்களுக்கு 100 முக்கிய பிரமுகா்கள் கடிதம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



