கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்!

நேபாளத்தில் 12 இந்தியர்கள் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2025, 9:27 pm IST

நேபாளத்தில் 12 இந்தியர்களுடன் சென்ற தனியார் பயணிகள் விமானம் அவசரமாக காத்மாண்டின் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் உள்நாட்டில் பயணிக்க இயக்கப்படும் சீதா ஏர்லைன்ஸ் எனும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் 12 இந்தியர்கள் உள்பட 15 பேர் இமய மலையின் அடிவாரத்திலுள்ள ரமேசாப் நகரத்தை நோக்கி இன்று (ஏப்.16) மதியம் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, மதியம் 2 மணியளவில் அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரினால் தலைநகர் காத்மாண்டுவை நோக்கி அந்த விமானம் திருப்பி விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காத்மாண்டுவின் திரிபுவன் பன்னாட்டு விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், அந்த விமானத்தில் சென்ற 15 பயணிகள் மற்றும் 3 பணியாளர்கள் என யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, அந்த விமானத்திலிருந்து விமான நிலையத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு தரையிறக்கப்பட்டதாகவும், பின்னர் ஓடுதளத்திலிருந்து நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.