சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 22 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிஜப்பூர் மாவட்டத்தின் டெக்மெட்லா கிராமத்திலுள்ள வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் துறையின் கோப்ரா பிரிவினரும், அம்மாநில காவல் துறையினரும் இணைந்து கடந்த ஏப்.15 மேற்கொண்ட சோதனையில் 7 நக்சல்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையின் மற்றொரு குழு மேற்கொண்ட நடவடிக்கையில் பெல்சார் கிராமத்திலுள்ள கோட்டைகளிலிருந்து 6 நக்சல்களும், கண்டாகர்கா கிராமத்திலிருந்து 9 நக்சல்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நக்சல்களிடமிருந்து சாப்பாட்டு டப்பாக்களில் செய்யப்பட்ட குண்டுகள், மாவோயிஸ்ட் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட நக்சல்கள் அனைவரும் 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பறக்கும்படை சோதனையில் வெளிமாநில மதுப்புட்டிகள் பறிமுதல்

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 108 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


