ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் பலி!

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2025, 5:23 pm

DIN

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஸ்வாத் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, தீவிரவாதிகளுக்கு எதிராக அவர்களது பதுங்குமிடங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன்; மிகப் பெரியளவிலான ஆயுதங்களின் குவியல்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதலில் பலியான தீவிரவாதிகள் 4 பேரும் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வேறு தீவிரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா என்பதைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஒட்டுமொத்த நாடும் தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.