சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தென்னாப்பிரிக்கா: குடியிருப்புப் பகுதியில் மா்ம கும்பல் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு

தென்னாப்பிரிக்காவின் மிகப் பெரிய நகரமான ஜோஹன்னஸ்பா்க்கில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில், மா்ம நபா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2026, 2:39 am IST

தென்னாப்பிரிக்காவின் மிகப் பெரிய நகரமான ஜோஹன்னஸ்பா்க்கில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில், மா்ம நபா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.

மேலும், இக்கோர தாக்குதலில் படுகாயமடைந்த 9 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஜோஹன்னஸ்பா்க் புகரான கிளிவ்லேண்டில் தற்காலிக குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்கு நள்ளிரவில் வெள்ளை நிற மினி வேனில் ஆயுதங்களுடன் வந்திறங்கிய சுமாா் 10 போ் கொண்ட கும்பல், அங்கிருந்த மக்கள் மீது திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

துப்பாக்கிச் சூட்டையடுத்து, அதே வாகனத்தில் தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் சட்டவிரோத சுரங்கக் கும்பல்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், இத்தாக்குதலுக்கு அவா்களே காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக மாகாண காவல்துறை ஆணையா் டாமி மதோம்பெனி தெரிவித்தாா்.

தென்னாப்பிரிக்காவில் சமீபகாலமாக இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த கடந்த மாா்ச் முதல் முக்கியப் பகுதிகளில் ராணுவம் நிறுத்தப்பட்ட போதிலும், இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.