அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

இரு சமூகத்தினருக்கு இடையிலான மோதலில் 10 பேர் கைது!

பிகாரில் இரு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :18 பிப்ரவரி 2025, 3:08 pm IST

பிகார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் வழக்கில் ஒரு பெண் உள்பட 10 பேர் அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜமூய் மாவட்டத்தின் பலியாதி பகுதியில் கடந்த பிப்.16 அன்று நடைபெற்ற மத ஊர்வலத்தின்போது இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்தது. அப்போது, இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களைக் கொண்டு தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு இணையத்தள சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. மேலும், காவல் துறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த மோதலானது மேலும் மோசமடையாமல் தடுப்பதற்காக அப்பகுதியில் காவல் துறையினர் நேற்று (பிப்.17) கொடி அணிவகுப்பு நடத்தியதுடன், 50 முதல் 60 பேரின் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், தற்போது குஷ்பூ பாண்டே எனும் பெண் உள்பட 10 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ஊர்வலத்தை அதிகாரிகளின் அனுமதியின்றி நடத்தியதற்காக சில நபர்களின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறிய காவல் அதிகாரிகள், துண்டிக்கப்பட்ட இணையத்தள சேவையானது இன்று (பிப்.18) மீண்டும் துவக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.