திருப்பூர்: திருப்பூரில் கத்தி முனையில் வடமாநில பெண்ணை கூட்டு பாலியல் வன்கொன்டுமை செய்த பிகாரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒடிசாவை சேர்ந்த பெண், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வேலை தேடி வந்தபோது இந்த கொடுமை நேர்ந்துள்ளது.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே நின்றிருந்த தம்பதியிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தங்கள் தங்கியிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று கணவனை கட்டிப்போட்டு விட்டு குழந்தை கண் எதிரில் கத்தியைக் காட்டி மிரட்டி மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை அடுத்து திருப்பூரில் பணியாற்றும் பிகாரை சேர்ந்த நதீம், டானிஷ், முர்சித் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளரின் மனைவியை புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டு: பெண் ஊழியா் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விவசாயி கைது

சென்னையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
ஒசூரில் வடமாநில பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு: பால் வியாபாரி கைது
விடியோக்கள்

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

