தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மகளைத் தாக்கிய தந்தை! காப்பாற்ற முயன்ற பாட்டி அடித்துக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி கொலை செய்யப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :24 பிப்ரவரி 2025, 6:02 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி தனது மகனால் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.

ஷாஜஹான்பூர் மாவட்டத்திலுள்ள சத்வா புஜூர்க் கிராமத்தைச் சேர்ந்த சத்யேந்திரா என்ற நபர், நேற்று (பிப்.23) இரவு தனது 13 வயது மகளை அடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த தாக்குதலிலிருந்து தனது பேத்தியைக் காப்பாற்ற அவரது பாட்டியும், சத்யேந்திராவின் தாயுமான மித்னா தேவி (வயது 75) என்ற மூதாட்டி முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சத்யேந்திரா, மித்னா தேவியை தடியால் அடித்து தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்நிலையில், தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த அம்மாநில காவல் துறையினர் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளி சத்யேந்திராவை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, சத்யேந்திரா மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படும் நிலையில் கொலை அரங்கேறியபோது அவர் போதையில் இருந்தாரா என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.