மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாதுகாப்புப் படையினரால் நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :3 ஜனவரி 2025, 12:43 pm

DIN

சத்தீஸ்கர் மாநிலம் கரியாபாண்டு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கரியாபாண்டு மாவட்டத்தில் சத்தீஸ்கர் - ஒடிசா எல்லையில் அமைந்துள்ள கந்தேஷ்வர் கிராமத்தில் இன்று (ஜன.3) பாதுகாப்புப் படையினர் நக்சல்களின் ஊடுருவல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அப்போது, அங்குள்ள காட்டுக்குள் பதுங்கியிருந்த நக்சல்கள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அதற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் முடிந்த பின்பு அவர்கள் அங்கு சென்று பார்த்தப்போது நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அவரிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் இருத்தரப்புக்கும் இடையே தற்போது துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.