மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாதுகாப்புப் படையினரால் நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜனவரி 2025, 12:43 pm

சத்தீஸ்கர் மாநிலம் கரியாபாண்டு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கரியாபாண்டு மாவட்டத்தில் சத்தீஸ்கர் - ஒடிசா எல்லையில் அமைந்துள்ள கந்தேஷ்வர் கிராமத்தில் இன்று (ஜன.3) பாதுகாப்புப் படையினர் நக்சல்களின் ஊடுருவல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அப்போது, அங்குள்ள காட்டுக்குள் பதுங்கியிருந்த நக்சல்கள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அதற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் முடிந்த பின்பு அவர்கள் அங்கு சென்று பார்த்தப்போது நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அவரிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் இருத்தரப்புக்கும் இடையே தற்போது துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.