டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரியத் தொடங்கியது.

News image
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Updated On :3 ஜனவரி 2025, 4:13 am

DIN

மேட்டூர்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரியத் தொடங்கியது.

காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நவம்பர் 19 ஆம் தேதி வினாடிக்கு 1000 கன அடியாக குறைக்கப்பட்டது. மழை நீடித்ததால் டிசம்பர் 21 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்கு பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிககு 500 கனஅடியாக மீண்டும் குறைக்கப்பட்டது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மெல்ல உயரத்தொடங்கியது. டிசம்பர் 31 ஆம் தேதி இரவு கடந்த ஆண்டு மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

தற்போது பாசனப்பகுதிகளில் பெய்த மழை தனிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு பாசன தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 5,000 கன அடியாகவும், இரவு வினாடிக்கு 10,000 கனஅ டியாகவும் அதிகரிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நிரம்பிய நிலையில் இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் இரண்டு நாள்களுக்குப் பிறகு குறையத் தொடங்கியது.

அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 120 அடியிலிருந்து 119.76 அடியாக குறைந்தது. ணையின் நீா்வரத்து வினாடிக்கு 1871 கனஅடியிலிருநது வினாடிக்கு 1992 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93.68 டி.எம்.சியாக உள்ளது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.