காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மியான்மரில் 60 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!

மியான்மர் நாட்டில் 60 கிலோ அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி..

News image

பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன்.

Updated On :4 ஜனவரி 2025, 12:10 pm

DIN

மியான்மரில் சுமார் 60 கிலோ அளவிலான மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஜன.4) தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மியான்மரின் ஷன் மாநிலத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த டிச.30 அன்று கெங்டங் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் கருப்பு சந்தையில் விற்பதற்காக மொங்பிங் நகரத்திலிருந்து சுமார் 60 கிலோ அளவிலான மெத்தபெட்டமைன் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் அவரிடமிருந்து அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவர் மீது அந்நாட்டு சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர்.

மேலும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அந்த போதைப் பொருளின் மதீப்பானது சுமார் 2.28 லட்ச அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, நேற்று (ஜன.3) ஷன் மாநிலத்தில் சுமார் 40.2 கிலோ அளவிலான ஹெராய்ன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.