உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி காவல் துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
அம்மாவட்டத்தின் படால் கிராமத்திலிருந்து பனாய் பகுதிக்கு செல்லும் சாலையில் நேற்று (ஜன.8) இரவு காவல் துறையினர் வழக்கமான தணிக்கைப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது, அந்த சாலையின் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் வண்டியை நிறுத்தும்படி போலீஸார் செய்கை செய்துள்ளனர். ஆனால், அவர் வண்டியை நிறுத்தாமல் அருகிலிருந்து வயலுக்குள் வண்டியை செலுத்தியுள்ளார். மேலும், அவரை பின் தொடர்ந்த காவல் துறையினரை நோக்கி அந்நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் அவரது காலில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார். பின்னர் அவரை சுற்றி வளைத்த போலீஸார் அவரை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஹசன்பீ என்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது பதாவுன், பரேலி மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளில் 10 திருட்டு வழக்குகள் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து ஒரு இரண்டு சக்கர வாகனமும், ஒரு நாட்டுத் துப்பாக்கியும் அதற்கான குண்டுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அவரை பிடிக்க காவல் துறையினர் ரூ.25,000 சன்மானம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர் காவல் துறையினர் கட்டுப்பாட்டில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









