தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்... விருந்தில் விஷம் கலந்த தாய்மாமன்!

மகாராஷ்டிராவில் பெண்ணின் திருமண நிகழ்ச்சி உணவில் தாய்மாமன் விஷம் கலந்ததைப் பற்றி...

News image

கோப்புப் படம் - Dinamani

Updated On :9 ஜனவரி 2025, 12:04 pm IST

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் தனது எதிர்ப்பை மீறி சகோதரியின் மகள் காதல் திருமணம் செய்ததினால், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாய் மாமன் விஷம் கலந்துள்ளார்.

அம்மாவட்டத்தின் உட்ரே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தை எதிர்த்து தனது காதலரை திருமணம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அப்பெண்ணின் வீட்டார் சம்மதித்து அவர்களுக்கு கடந்த ஜன.7 அன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு, மணமகளின் தாய் மாமாவான மகேஷ் பாடில் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது எதிர்ப்பை மீறி சகோதரியின் மகள் காதல் திருமணம் செய்துக்கொண்டதினால், அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவில் மகேஷ் பாடில் விஷம் கல்ந்துள்ளார். அப்போது, மண்டபத்திலிருந்த விருந்தினர்கள் சிலர் இதை கவனித்து அவரை தடுத்துள்ளனர்.

தனது சம்மதம் இல்லாமல் அந்த திருமணம் நடந்ததினால் அவர் இவ்வாறு செய்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உணவில் விஷம் கலக்கப்பட்டதை அறிந்தது விருந்தினர் யாரும் உணவை சாப்பிடாததினால் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்த அம்மாநில காவல் துறையினர் அங்கு விரைந்து விஷம் கலக்கப்பட்ட உணவின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தப்பியோடிய மகேஷ் பாடில் மீது விஷப் பொருள்களை அலட்சியமாக கையாண்டதற்காகவும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதற்காகவும் சட்டப் பிரிவு 286 மற்றும் 125 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தப்பியோடிய அவரைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.