உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்... விருந்தில் விஷம் கலந்த தாய்மாமன்!

மகாராஷ்டிராவில் பெண்ணின் திருமண நிகழ்ச்சி உணவில் தாய்மாமன் விஷம் கலந்ததைப் பற்றி...

கோப்புப் படம் - Dinamani

Published On :9 ஜனவரி 2025, 12:04 pm IST

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் தனது எதிர்ப்பை மீறி சகோதரியின் மகள் காதல் திருமணம் செய்ததினால், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாய் மாமன் விஷம் கலந்துள்ளார்.

அம்மாவட்டத்தின் உட்ரே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தை எதிர்த்து தனது காதலரை திருமணம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அப்பெண்ணின் வீட்டார் சம்மதித்து அவர்களுக்கு கடந்த ஜன.7 அன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு, மணமகளின் தாய் மாமாவான மகேஷ் பாடில் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது எதிர்ப்பை மீறி சகோதரியின் மகள் காதல் திருமணம் செய்துக்கொண்டதினால், அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவில் மகேஷ் பாடில் விஷம் கல்ந்துள்ளார். அப்போது, மண்டபத்திலிருந்த விருந்தினர்கள் சிலர் இதை கவனித்து அவரை தடுத்துள்ளனர்.

தனது சம்மதம் இல்லாமல் அந்த திருமணம் நடந்ததினால் அவர் இவ்வாறு செய்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உணவில் விஷம் கலக்கப்பட்டதை அறிந்தது விருந்தினர் யாரும் உணவை சாப்பிடாததினால் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்த அம்மாநில காவல் துறையினர் அங்கு விரைந்து விஷம் கலக்கப்பட்ட உணவின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தப்பியோடிய மகேஷ் பாடில் மீது விஷப் பொருள்களை அலட்சியமாக கையாண்டதற்காகவும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதற்காகவும் சட்டப் பிரிவு 286 மற்றும் 125 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தப்பியோடிய அவரைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.