அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தாயும் குழந்தையும் தீயில் கருகி பலி! தந்தை தற்கொலை!

சத்தீஸ்கரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :10 ஜனவரி 2025, 1:04 pm

DIN

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் வீட்டில் பற்றிய தீயில் தாயும் குழந்தையும் பலியாகினர். தந்தையின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அம்மாவட்டத்தின் கம்தாரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குப்தா (வயது 25) தனியாக வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சந்தானி குப்தா (20) என்ற மனைவியும் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையும் ஒன்று இருந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (ஜன.10) இவர்களது வீட்டில் பற்றிய தீயில் உடல் கருகி பலியான நிலையில் சந்தானி குப்தா மற்றும் அவர்களது குழந்தை ஆகிய இருவரது உடலும் கைப்பற்றப்பட்டது. பின்னர், அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சுரேஷ் குப்தாவின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த காவல் துறையினர் மூவரது உடலையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, மனைவியையும் குழந்தையையும் தீயிட்டு கொளூத்தி கொலை செய்துவிட்டு, சுரேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிகப்பட்டு வரும் நிலையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.