ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

குஜராத்: சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர் கைது!

குஜராத்தில் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியரைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :13 ஜனவரி 2025, 8:22 am

DIN

குஜராத்தின் கட்சு மாவட்டத்தில் இருநாட்டு எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

அம்மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ள கட்சு மாவட்டத்தில் நேற்று (ஜன.12) பாதுகாப்புப் படையினர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள ஹராமி நாலா எனும் நீர்நிலையின் வடக்குப் பகுதி வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபரை பிடித்து பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் சுஜாவால் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு அலி என்றும், அவர் காரூ கூன்குரோ எனும் கிராமத்தில் வசித்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

அவர் கடந்து வந்த ஹராமி நலா என்பது இருநாட்டு எல்லைக்கு மத்தியில் ஓடும் இயற்கையான நீர்நிலை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.