குஜராத்தின் கட்சு மாவட்டத்தில் இருநாட்டு எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
அம்மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ள கட்சு மாவட்டத்தில் நேற்று (ஜன.12) பாதுகாப்புப் படையினர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்குள்ள ஹராமி நாலா எனும் நீர்நிலையின் வடக்குப் பகுதி வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபரை பிடித்து பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் சுஜாவால் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு அலி என்றும், அவர் காரூ கூன்குரோ எனும் கிராமத்தில் வசித்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் கடந்து வந்த ஹராமி நலா என்பது இருநாட்டு எல்லைக்கு மத்தியில் ஓடும் இயற்கையான நீர்நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

சாலையை கடக்க முயன்ற புதுகை இளைஞா் லாரி மோதி பலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


