சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசா: யானை தாக்கியதில் பலியான பெண்! பொதுமக்கள் போராட்டம்!

ஒடிசாவில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலியானதைப் பற்றி..

News image
யானை - (கோப்புப் படம்)
Updated On :15 ஜனவரி 2025, 7:15 am

DIN

ஒடிசா மாநிலம் தியோகார் மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார்.

தியோகார் மாவட்டத்தில் கடந்த ஜன. 13 அன்று இரவு குந்தெய்கோலா வனப்பகுதியிலிருந்து சங்காபாஸி கிராமத்தினுள் புகுந்த இரண்டு காட்டுயானைகள் குனி பெஹரா (வயது 50) என்ற பெண்ணின் வீட்டிற்கு பின்னால் இருந்த சோளத் தோட்டத்தை நாசம் செய்துள்ளன. இதனால், அந்த பெண்ணின் வீட்டில் கட்டப்பட்டிருந்த கால்நடைகள் மிரண்டு சத்தம் எழுப்பியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, தனது வீட்டின் பின்னால் கட்டப்பட்டிருந்த மாட்டை காப்பாற்ற அவர் சென்றபோது அங்கிருந்த யானை ஒன்று அவரை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர், அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அங்குல் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து, அங்கு விரைந்த குந்தெய்கோலா வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த யானைகளை விரட்டினர்.

இந்நிலையில், நேற்று (ஜன.14) வனத்துறையினரின் அலட்சியப் போக்கே அந்த பெண்ணின் மரணத்திற்கு காரணம் என்றும் பலியான பெண்ணின் உறவினர்களுக்கு உரிய நிவாரணமும், வேலையும் வழங்கவேண்டும் என வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலை 53 மறித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அந்த யானைக்கு மயக்கமருந்து செலுத்தி மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இருந்து கொண்டு சென்று வேறொரு வனப்பகுதிக்குள் விடவேண்டும் எனவும் அந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நீடித்த அந்த போராட்டம், வனத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.