நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

மதுரையில் பட்டியலின சிறுவனை காலில் விழ வைத்து சித்ரவதை!

மதுரை சங்கம்பட்டியில் கோவில் திருவிழாவில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஆடிய பட்டியலின சிறுவனை தாக்கி காலில் விழ வைத்து சித்ரவதை செய்தாக 6 பேர் மீது வழக்கு

News image

கோப்புப்படம்

Updated On :19 ஜனவரி 2025, 6:45 pm IST

மதுரை: மதுரை சங்கம்பட்டியில் கோவில் திருவிழாவில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஆடிய பட்டியலின சிறுவனை தாக்கி காலில் விழ வைத்து சித்ரவதை செய்தாக 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி சங்கம்பட்டியைச் சோ்ந்த சிறுவன், கடந்த புரட்டாசி மாதம் சங்கம்பட்டி பாா்வதி அம்மன் கோவில் தெருவில் நடைபெற்ற திருவிழாவில் சிறுவா்களுடன் சோ்ந்து நடனம் ஆடியுள்ளாா். அப்போது அவா் வேட்டியை மடித்துக்கட்டி ஆடியதால், அங்கிருந்த மாற்று சமூகத்தைச் சோ்ந்த சிலா், சிறுவனின் சமூகத்தின் பெயரைச் சொல்லி திட்டி தாக்கியதால், சிறுவனின் தரப்பினரும் திருப்பி தாக்கியுள்ளனா்.

இதைத்தொடா்ந்து ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக சிறுவன், மதுரையில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியுள்ளாா்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறுவன் தனது சொந்த ஊரான சங்கம்பட்டிக்கு வந்துள்ளாா்.

இதனை அறிந்த எதிர் தரப்பினர் ஜனவரி 16 ஆம் தேதி சிறுவனை கடத்திச்சென்று, அங்குள்ள முத்தையா கோவிலில் வைத்து தாக்கி, அங்கிருந்த 6 வயது சிறுவன் உள்பட அனைவரின் காலிலும் விழ வைத்து மன்னிப்பு கேட்குமாறு தாக்கியதுடன் சிறுவனின் சமூகத்தின் பெயரையும் கூறி அவதூறாக திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதில் காயமடைந்த சிறுவன் அளித்தப்புகாரின் பேரில் உசிலம்பட்டி நகா் காவல் நிலைய போலீசாா் 6 போ் மீதும் 256(பி), 351(2), சிறுவனின் சமூகத்தை சுட்டிக்காட்டி திட்டியது, தாக்கியதாக 3(1)(ஆர்), 3(1)(எஸ்)ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பட்டியல் இன சிறுவனை காலில் விழ வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.