ஒடிசா மாநிலம் ராயகாடா மாவட்டத்தில் செய்வினை வைத்ததாக சந்தேகித்து அடித்தும், கத்தியால் குத்தியும் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி பலியானார்.
ராயகாடாவின் மண்கடஜோலா கிராமத்தைச் சேர்ந்த பாலு ஜோடியா மற்றும் பெஜு ஜானி ஆகிய இருவர் காலிமணி ஜானி (வயது 70) என்ற மூதாட்டியை கடந்த சனிக்கிழமை (ஜன.18) இரவு அவரது வீட்டில் இருந்து வெளியே வலுக்கட்டாயமாக இழுத்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும், அவரை கத்தியாலும் குத்திவிட்டு அவரை அங்கேயே அவர்கள் விட்டு சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) காலை உயிருக்கு போராடிய அவரை கண்டுபிடித்த கிராமவாசிகள் ராயகாடா மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக பெர்ஹாம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.21) அவர் பரிதாபமாக பலியானார்.
முன்னதாக, மூதாட்டியை தாக்கிய இருவரில் ஒருவரான பாலு என்பவரது மருமகளும், பேரனும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். அவர்களது இறப்புக்கு காலிமணி செய்த செய்வினைதான் காரணம் என்று பாலுவின் குடும்பத்தினர் கொண்டிருந்த மூடநம்பிக்கையினால் அவர் மூதாட்டியை தாக்கி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த ராயகாடா காவல் துறையினர் பெஜு வை கைது செய்தனர். இருப்பினும், தப்பியோடிய முக்கியக் குற்றவாளியான பாலுவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பதி மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்த 116 வயது மூதாட்டி!

தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது
திருச்சியில் 13 வயது பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



