அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆப்கனில் சீனர் கொலை! தலிபான் அரசு அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் சீனர் ஒருவர் கொலை செய்யப்பட்டதைப் பற்றி..

News image
கோப்புப் படம்
Updated On :22 ஜனவரி 2025, 12:24 pm

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கு மாகாணத்தில் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தலிபான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தஷ்கர் மாகாணத்தில் பயணம் செய்தபோது ‘லீ’ எனும் பின்பெயரைக் கொண்ட சீன நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதாக தலிபான் காவல் துறையின் செய்தி தொடர்பாளர் முஹம்மது அக்பர் தெரிவித்துள்ளார்.

தஷ்த்-இ-காலா எனும் மாவட்டத்தை நோக்கி தனது மொழிப்பெயர்பாளர் ஒருவருடன் லீ பயணம் செய்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் தனது பயணம் குறித்து தெரிவிக்காமல் சென்றுள்ளார். ஆனால், அவருடன் சென்ற அவரது மொழிப்பெயர்பாளர் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், லீ யின் கொலைக்கு அந்நாட்டை சேர்ந்த நேஷனல் மொபிலைசேஷன் பிரண்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தலிபான் உளவுத்துறைக்கு சமூக ஊடகங்கள் குறித்து பயிற்சி அளித்து வந்ததினால் தாங்கள்தான் அந்த சீனரின் வாகனத்தை தாக்கி அவரை கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியதாவது, ஆப்கானிஸ்தானிலுள்ள சீன தூதரகம் அந்நாட்டிலுள்ள சீன மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் எனவும் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை அவர்கள் தொடர்ந்து கண்கானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் வெளிநாட்டினர் கொல்லப்படுவது மிகவும் அரிதான ஒன்று. ஆனால், கடந்த 2022 டிசம்பர் மாதம் தலைநகர் காபுலிலுள்ள சீன உணவகத்தில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து தங்களது நாட்டினரை நாடுத் திரும்ப சீனா வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.